ஹரி கோவிந்தா எனக் கூவி அழைத்தே
பல்லவி
ஹரி கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா எனக் கூவி அழைத்தே
திருமலையில் ஏறி உன்தன் பாதகமலத்தில் பணிந்தோமே ஶ்ரீ
அனுபல்லவி
ஒரு கணப்பொழுதே உன் கனிவான முகத்தை தரிசித்தாலுமே
மனம் முழுவதும் நீ நிறைந்து விட்டாய், ஏழுமலைவாசனே ஶ்ரீ
சரணம் (1)
நினைத்ததை நடத்தி கொடுப்பதற்கு நீ இருக்கையிலே
இனியொரு குறையுமில்லையே கலியுக வரதா கண்ணா
மெய் இது தான் என்று நாங்கள் அறிந்து கொண்டோமே
பையப் பையவே நாங்கள் உன்னை சரண்டைந்தோமே ஶ்ரீ
சரணம் (2)
ஶ்ரீனிவாசா, ஶ்ரீ கோபாலா, என்றும் துணை நீயே கோவிந்தா எனக்
கூவிவரும் பக்தர்களுக்கு தீனதயாளனாய், குலதெய்வமாயும் இருந்து
கண்ணில்இமை காப்பது போல் காத்திடும், தருமத்தின் தலைவனாய்
வேங்கடேசனாய், தஞ்சமென வந்தோரை அஞ்சேல் எனக்கூறும் ஶ்ரீ