திருமலையப்பா ஶ்ரீநிவாசனே ஶ்ரீ வேங்கடேசா


பல்லவி

திருமலையப்பா ஶ்ரீநிவாசனே ஶ்ரீ வேங்கடேசா

ஒருக்கணமே நான் உன்னை கண்டேன் அப்பா


அனுபல்லவி

பற் பலரும் போற்றிப் பணிந்தே அதிசயிக்கின்ற

கற் சிலையின் மஹிமையை நான் அறிந்தேனப்பா


சரணம்

பிரஸாதங்களை பெற்றுக்கொண்டு ஆனந்தமுடன்

பிரஹாரத்தை வலம்வந்தே கோபுரதரிசனம் செய்தேனே

பிறவி எடுத்ததன் பலனை அடைந்ததை நினைத்தே

பெருமையுடன் மங்கைமனாளா உன்னை சரணடைந்தேனே