சரஸ்வதி தாயே தயை புரிவாயே
பல்லவி
சரஸ்வதி தாயே தயை புரிவாயே
உன்னையே சரணென்று வந்தேன் தேவி கலைவாணியே
அனுபல்லவி
பரதம், சங்கீதம், கல்வி கலைகளுக்கு அதிபதியே
பரமானந்தம் அளிக்கும் கலைமகளே வாக்தேவியே
சரணம்
சிரத்தில் மகுடம்மின்ன, வெண்பட்டுசேலை உடுத்தியே
கரமதில் அழகிய வீணையும் புத்தகமும் ஏந்திய தேவியே
சிரம் தாள் தாழ்த்தி வணங்குகிறேன் நான்முகன் நாயகியே
பாராமுகம் ஏன்அம்மா இந்தஅடியவளிடம் கருணாசாகரியே