சகலகலாவல்லியே சதுர்முகன் நாயகி ஶ்ரீ சரஸ்வதி


பல்லவி

சகலகலாவல்லியே சதுர்முகன் நாயகி ஶ்ரீ சரஸ்வதி

கீர்த்திகள் பல எங்களுக்களிக்கும் வீணாபாணியே தேவி


அனுபல்லவி

தூய உள்ளமுடன், உன்னை தாயென நினைத்தே வந்த

சேயான எங்களை காக்க தாமதம் தான் ஏனோ தயாசாகரி


சரணம்

பால் போன்ற வெள்ளை உள்ளம் கொண்ட பங்கஜவாசினியே

எக்காலத்திலும் அழியாதபல, கலைகளையும், பண், பரதம், கல்வி

இன்சொற்கள் அனைத்தும் பக்தர்களுக்களித்து அருள் புரியவே

கூத்தனூரில் அமர்ந்த பாரதியே,நின் தாளடியே சரணம், சரணமம்மா