ஓடோடியே வந்தேன் கலைவாணியே + விருத்தம்
நாடோடியாய் திறிந்தேன்
காடுமலைகள் யெல்லாம் கடந்தேன்
உனை காணாது தவித்தேன்
உள்ளம் உறுகிட வேண்டி தளர்ந்தேன்
தனிமையில் குமைந்தேன்
தரணியை சுற்றி சுற்றியே அலைந்தேன்
நடந்தேன் நடந்தேன் நடந்து கொண்டே இருந்தேன்
இறுதியில் எனது தெய்வம் நீ என உணர்ந்தேன்
ஏதும் செய்வதறியாது துடித்தேன்
பல்லவி
ஓடோடியே வந்தேன், கலைவாணியே உன்னை காணவே ஆவலாய்
ஓடோடியே வந்து உன் பொன்மலர் பாதங்களை தரிசித்தேன் நான்
அனுபல்லவி
பார்த்தேன் பலவிதமாய், வண்டின் ரீங்காரத்தில் உனை கண்டேன்
குயிலின் குரலில் உனை கண்டு அதிசயித்தேன், தோகை விரித்தாடும்
வண்ண மயிலின் ஆட்டத்திலும் நீ இருந்ததையும் அறிந்தேன் சாரதே
கவிகளின் கவிதைகளில் உன்தன் மகத்துவத்தை உணர்ந்தேன் தேவி
சரணம் (1)
அந்தோ வெண்தாமரையில் உன்னை பூரணமாய் கண்டு திகைத்தேன்
வெண் பட்டிற்கே உன்னால்தான் மஹிமை கிடைத்ததோ என வியந்தேன்
பின் கைகளில் ஏட்டுசுவடியை பார்த்தேன், ஜபமாலையை பணிந்தேன்
முன்கைகளின் விரல்கள் இனிய வீணை மீட்டுவதை ரஸித்தேன்
சரணம்(2)
மெல்லிய புன்னகை மின்னும் இதழ்களில் மனதை பறிகொடுத்தேன்
சிரத்தில் மகுடத்தினின் அழகினைக்கண்டு பரவஸமடைந்தேன்
வேதம், கீதம், நாதம், கல்வி, நாட்டியத்திலும் உனை கண்டு மலைத்தேன்
இகபற சுகங்கள் அனைத்திலும் நீ நிறைந்திருக்கிறாய் என வகுத்தேன்
சரணம் (3)
நான்முகன் நாயகியே நாமகளே, நின் பொன்மலர் பாதத்தில்சரணடைந்தேன்
எங்கெங்கும் நீ நிறைந்திருக்கிறாய் என்பதை நினைத்து சிலிர்த்தேன்
மங்காத செல்வங்களும் இதுதான் என்று நான் உன்னை பூஜித்தேன்
இதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை என நான் எடுத்துரைத்தேன்
சரணம்(4)
மங்களமாய் கோலமிட்டு மகிழ்ந்தேன், திருவிளக்கேற்றி சந்நிதியில் வைத்தேன்
மலர்களை கொய்தேன், மாலைகள் தொடுத்தேன், மகிழ்ச்சியாய் அணிவித்தேன்
பலவகை பிரஸாதங்கள், பால் தயிர், பழங்களென உனக்கு பரவஸமாய் படைத்தேன்
ஆராதித்தேன், அதிசயித்தேன், அன்பாய் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி சேவித்தேன்
ஓடோடியே வந்தேன் கலைவாணியே உன்னை காணவே ஆவலாய்
ஓடோடியே வந்து உன் பொன்மலர் பாதங்களை தரிசித்தேன் நான்