அரங்கத்திற்கு செல்லுவோம் ஆனந்தமாகவே நாம்
பல்லவி
அரங்கத்திற்கு செல்லுவோம் ஆனந்தமாகவே நாம்
ரெங்கநாயகி சமேத ரங்கராஜரையும் தரிசிக்க திரு
அனுபல்லவி
திங்களும் தோழிமாருடன் பாவை நோன்பு நூற்ற அந்த
பூங்கோதையை அழகிய மனவாளருடன் சேவிக்க திரு
சரணம்
சிங்காரமான பல சிற்பக் கலைகள் கண்ணை பறிக்க
பாங்காக அமைந்த பொற்கோயிலின் உள்ளே சென்று நம்
சங்கடங்களை தீர்த்து, மங்களங்களை அளிக்கும் லஷ்மி
நரசிங்கபெருமானின் அன்பான ஆசிகளையும் பெற்றிடவே திரு