ராம ஜபத்தை தினமும் ஜபிப்போமே மனமே
பல்லவி
ஷேமங்கள் பல அளித்து, நாம் செய்த பாபங்களை அகற்றிடும் ஶ்ரீ
ராம ராம என்னும் ராம ஜபத்தை தினமும் ஜபிப்போமே மனமே
அனுபல்லவி
அயோத்தியில் அவதரித்த, அனந்த சயனன் அன்னை
கோசலை மன மகிழ் வீராதி வீரன் ஶ்ரீ ராகவன் நமக்கு
சரணம்
சிவதனுசை ஒடித்தே, தேவி பூமிஜாவை மணம் புரிந்த
சுந்தர மன்மதரூபன், ராகவஸிம்மன், ரகுகுல திலகனை
தந்தை சொல் காத்திடவே மரவுரி, மான்தோல் தரித்தே
தரணியில் யாவரும் வியக்க, கானகம் சென்ற தர்மப்பிரபுவை
தாஸன் அனுமன் சதா ராம, ராம, ராம, ராம என ஜபித்திடும்
தாஸரதியை, அவன் திருவடியே துணை (சரணம்) என்று பணிந்தே