வந்தனம் செய்திடுவாய் மனமே ரகு நந்தனை
பல்லவி
வந்தனம் செய்திடுவாய் மனமே ரகு
நந்தனை தினமும் மறவாமல் நீ
அனுபல்லவி
எந்த சோதனைகள் வந்தாலும் பனி
போல் அகற்றிடும் ஸீதாராமனை நீ
சரணம்
சிந்தையில் அவனை இருத்தி ஶ்ரீராமா என்ற
மந்திரத்தை சதா ஜபித்தால் போதுமே அர
விந்தபாதன் நமை கைவிட மாட்டான் என்ற
தந்திரத்தை நீ அறியாயோ மனமே நீ