வந்தனங்கள் கோடி கோசலை குமாரனுக்கு


பல்லவி

வந்தனங்கள் கோடி கோடி வந்தனங்கள் கோசலை குமாரனுக்கு

வந்தனங்கள் கோடி கோடி வந்தனங்கள் கோதண்டராமனுக்கு


அனுபல்லவி

மந்தஹாச புன்னகை மின்ன, கடைகண்ணால் அன்புடன் நோக்கி

எந்த துன்பமும் அண்டாது பக்தர்களை காத்திடும் சியாமளரூபனுக்கு


சரணம்

அயோத்தியில் அவதரித்து, அன்னைகள் மூவரைக்கொண்ட அண்ணல்

அந்தோ மிதிலையில் வில்லை ஒடித்தே, ஜானகி தேவியை மணம் புரிந்து

அஞ்சாநெஞ்சன் தாஸன்,அனுமனின் மார்பில் சதா உறைந்த ராகவனை

அகிலமெல்லாம் ஆனந்தமாகவே ராம ராம என்று ஜபிக்கும் ராஜாராமனுக்கு