வடுவூர் ராமர் - சுந்தர மன்மதரூபன் திருமால் ராமபிரானை
பல்லவி
சுந்தர மன்மதரூபன், திருமால் ராமபிரானை தட்ஷிண
அயோத்தி என்னும் வடுவூரில் தரிசிக்க சென்றோமே
அனுபல்லவி
வரம் அருளும் கோதண்டராமராய், வடிவில் மிக அழகானவரை
திருக் கல்யாணகோலத்தில், சீதா, லஷ்மண, அனுமருடன்
சரணம்
சந்திர வதனமதில், நீண்ட புருவம், சிவந்த உதடுகளும், அவ்
உதடுகளில் தவழும் மோகன புன்னகையுமே அழகோ அழகு
கையில் வில்லை பிடித்திருப்பது, அழகிலும், அழகு, அருகில்
அன்னை ஜானகியோ, அதி அற்புதமான, அழகாகவும், அங்கு
அஞ்சலி ஹஸ்தனான, அனுமனும் அழகாய், காட்ஷி அளிக்க
என்ன ஓர் அதிசயமான, காட்ஷி என மனமும் குதூகலிக்கவே
கண்ணுக்கு இனியன கண்டோம், என்றே மெய் சிலிர்த்து
மன நிறைவுடன், திருவடிதாமரைகளையும் தரிசித்து மகிழ்ந்தது