பார்கடல் வேந்தன் - ஶ்ரீராமராய் அவதரித்தாரே
பார்கடல் வேந்தன் ஶ்ரீமந் நாராயணனே அயோத்தியில்
தசரதராஜர் கோசலையின் மகன் ஶ்ரீராமராய் அவதரித்தாரே
ஜனக குமாரி ஜானகியை மணம் புரியவே
சிவதனுசை வளைத்தாரே
அவர் சிவதனுசை வளைத்து ஒடித்தாரே
ஶ்ரீராகவன் சிவதனுசை வளைத்து ஒடித்தாரே
கோடிசூர்யபிரகாசனாய் கோமள சியாமளனாய்
கல்யாணக்கோலம் கொண்டாரே
கோதண்டராமன் சீதையை மணம்புரிந்தாரே
ராகவன் சீதையை திருமணம் புரிந்தாரே
தந்தை தாய் சொல்கேட்டு தாரமாம் சீதையுடன்
துறவியாய் காட்ஷி அளித்தே தம்பியும் பின்தொடர
தயங்காமல்காடுசென்றார்
அவர் தயங்காமல்கானகம் சென்றாரே
பொன்மானை பிடிப்பதற்கு வெகுதூரம் சென்றபோது
அவர் வெகுதூரம் சென்றபோதே
சீதையை தூக்கி சென்றானே
அரக்கனான ராவணன் சீதையை அபகரித்து சென்றானே
ஜானகியை தேடியே மாருதியும் ஓடி சென்றானே
தாசன் மாருதியும் ஓடி அலைந்தானே
சீதையை கண்ட மாருதி ஆனந்த கூத்தாடியே
கணையாழியை கொடுத்தானே
அனுமன் கணையாழியை அளித்தானே
சீதையும் மறவாமல் சூடாமணியை தந்து
வாயுபுத்ரனை ஆசீர்வதித்து அனுப்பினாளே
ஜானகி வாயுபுத்ரனை ஆசிகூறி அனுப்பி வைத்தாளே
ஶ்ரீராமரும் சேதுபந்தனம் செய்து யுத்தம்புரிந்தாரே
கோதண்டராமன் யுத்தம் புரிந்தாரே
அரக்கர்களையும் மற்றும் ராவணனையும வென்று
சீதையை சேர்ந்தடைந்தாரே
ஶ்ரீராமன் சீதையைசேர்ந்தடைந்தாரே
மாருதியும் சீதாராமரைவணங்கி நின்றாரே
அனுமன் தலைவணங்கி ஆசி பெற்றாரே
அவர் சீதாராமரிடம் ஆசிகளும் பெற்றாரே
அனைவரும் அயோத்தி வந்தனரே
அவர்கள் யாவரும் அயோத்த வந்தடைந்தனரே
கோலாகலமாய் பட்டாபிஷேகமும்நடந்ததே
பட்டாபிராமருக்கு மிகக்கோலாகமாகவே நடந்தேறியதே
சீதாராமர் வாழ்க! ஶ்ரீராமர் வாழ்க! என
கரகோஷங்களிட்டு யாவரும் ஆனந்தமாய்
கை கூப்பி வணங்கி நின்றனரே
அவையோர்கள் அனைவரும்
சீதாராமரான பட்டாபிராமரை வணங்கினரே
தலை வணங்கி நின்றனரே
நாம் அனைவருமே சீதாராமரை வணங்கி
ஆசிகள் பெற்றிடுவோமே
அவர்களின் தாள்களில் நாமுமே வணங்கி
ஆசிகள் பெற்று பேரின்பம் அடைந்திடுவோமே