தாயே கோசலே உன்தன் தவத்தின் பலனாய் உதித்த
பல்லவி
தாயே கோசலே உன்தன் தவத்தின் பலனாய் உதித்த
அற்புதன் ஶ்ரீராமனின் அருமை பெருமை களை கேளடி
அனுபல்லவி
தேவியே கேளடி உன்தன் தேவகுமாரன்ஶ்ரீராமன் செய்த
தீரங்கள் நிறைந்த செயல்கள் திகைப்பாய், தோணுதடி
சரணம் (1)
கால்களில் முட்கள் குத்த கையினால் சீதையை அணைத்து
இலக்குவனும் பின் தொடர, கானகம் சென்றடைந்துஅங்கு
குஹனின் அன்பான உதவியால் கங்கையையும் கடந்து வந்து
சித்திரகூடத்தில் பரதனுக்கு பாதுகைஅளித்த ஶ்ரீராமனை பெற்ற
சரணம் (2)
அகஸ்தியரை தரிசித்து, பஞ்சவடி சென்று அங்குவந்த சூர்ப்பனகையின்
மூக்கை அறுக்க வைத்து, மாயமானாய் துள்ளி வந்த மாரீசனை கொன்று
சீதையை பிரிந்து தளர்ந்த மனதுடன் தேடி,ஜடாயூ அளித்த நம்பிக்கையில்
மகிழ்ந்து அதற்கு நன்றிகூறி, சபரிக்கு மோட்ஷமளித்த ஶ்ரீராமனை பெற்ற
சரணம் (3)
அனுமனை கண்டு சுக்ரீவனுடன் நட்பு கொண்டு, வாலியை வதைத்து.
அனுக்கிரஹ பலத்தை அனுமனுக்கு அளித்து சாகரத்தை தாண்ட வைத்தே
அங்கும் இங்கும் அலைந்து திரிந்த அனுமன் ஶ்ரீஇலங்கையில் சீதையை
அசோகவனம் தனில் கண்டு கண்டேன் சீதையை ஶ்ரீராமா என்று மனமுருகிட
சரணம் (4)
அண்ணலின் கதைகளை கூறி அவர் கொடுத்த கணையாழியை தந்த மாருதி
அன்னை அளித்த சூடாமணியை பெற்றுக்கொண்டு கனத்த மனதுடனே சென்று
இராவணனை கண்டு உபதேசிக்க அவன் சினம் கொண்டே யார் அங்கே வாருங்கள்
இவன் வாலில் தீ வைத்து விரட்டுங்கள் என கட்டளை இட அனுமன் ஶ்ரீராம் எனகூற
சரணம் (5)
அனுமனின் வாலில் வைத்த தீ தஹ தஹ வென எறிய இலங்கை சுற்றிலும் அவரும்
அணலை பரவ விட்டு விட்டு அந்தோ சீதைக்கு ஏதும் ஆகவில்லை என தெரிந்து அஸோகவனத்தை விட்டு வந்து சாகர நீரில் தன் வாலை நனைத்துக்கொண்ட பிறகு
அந்த சாகரத்தைதாண்டி வந்து தன் கூட்டங்களை கண்டமகிழ்ச்சியில் ஶ்ரீராம் எனகூற
சரணம் (6)
அவர்களும் அனுமனின் மகிழ்ச்சியை கண்டு அவர்போன காரியம் ஜயமென குதூகலித்து
அவரின் வாயிலாக அறிய ஆவல்கொண்டு ஆரத்தழுவி பரவஸமுடன் அவரிடம் வினவ
அனுமனும் தாமதியாமல் கண்டேன் கண்டேன் சீதையை நான் என்று கூறி குதூகலிக்க
அனைத்துவானரமும் ஆனந்தத்தில் வனத்தைத்வம்சம்செய்து விட்டு ஶ்ரீராமரிடம் செல்ல
சரணம் (7)
அனுமனும்தாவிசென்றுகண்டேன் கண்டேன் சீதையை என்றுகூத்தாடி சீதை தன்னிடம் அளித்த சூடமணியை கொடுக்க ஆனந்தக்கண்ணீருடன் அனுமனை தழுவி அணைத்து
அகமகிழ்ந்தே, யாவரும்கடலில் அணைகட்டி பரிவாரமுடன் சென்று இராவணன் மற்ற
அனைவரையும் வென்று அசோகவனம் தனில் சீதையை கண்டு மகிழ்ந்த ஶ்ரீராமனின்
சரணம் (8)
அக்னிதேவனின் ஆசியையும் சீதாதேவி பெற்றுக் கொண்டு யாவரும் பஞ்சவடி சென்று
அங்கு காத்திருந்த பரதனை அழைத்துக் கொண்டு விபீஷணனின் பட்டாபிஷேகத்தை
அற்புதமாய் செய்து முடித்துக் கொண்டு ஆருயிரான சீதை அருமை தம்பிகளும் தாஸன் அனுமனும் பின் தொடர அன்னைகளின் ஆசிகளை பெற்றிட அயோத்தி வருகிறார் ஶ்ரீராமன்