எல்லோரும் வாருங்கள் அயோத்தி மாநகர் சென்று
பல்லவி
எல்லோரும் வாருங்கள் அயோத்தி மாநகர் சென்று ஆனந்தமாகவே
கோசலை செல்வனான தாசரதியை வணங்கி தரிசித்து வருவோமே
அனுபல்லவி
அயோத்தி மாநகரே கோலாகலம் பூண்டு வண்ணமயமாய் ஜொலித்திடவே
சரயூநதிகரையில் அமைந்த பிரம்மாண்ட பொற்கோவில் தனிலே
சியாமள வண்ணனான ஶ்ரீராமனை தரிசித்து அருளும் ஆசிகளும் பெறவே
பக்தர்கள் அனைவரும் ஆனந்தமாக ஆடியும் பாடியும் வந்தனரே
சரணம் (1)
அகண்ட ராமநாமம் பஜனை கீர்த்தனை என அனைவரும் திளைத்திருக்கவே
சதா ராமநாமம் ஜபிக்கும் சிரஞ்சீவியான ஆஞ்சனேயர் அங்கு அமர்ந்து கேட்க
பட்டு பீதாம்பரஉடையும் மாணிக்கம் வைர வைடூரியம் முத்து ரத்தினத்தால் ஆன
நகைகளை அணிந்தே புன்னகை புரியும் சீதாராமனிடம் ஆசிகள் பெற்று வரவே
சரணம் (2)
கோதண்டராமனாய் கல்யாணராமனாய் ஏரிகாத்தராமனாய் ஜானகிராமனாய்
சாளிக்கிராமராமனாய் வைத்தியவீரராகவனாய் பட்டாபிராமனாய் மேலும்
பற்பல ராமர்களாய் வையகமெங்கும் நிறைந்திருக்கும் ஜானகிராமனை நாமுமே
ராம ராம ராம், ஶ்ரீராம ராம ராம், என பஜித்தே அவர் பொற்பாதங்களில் சரணடைய