அயோத்தி மன்னரான தசரதகுமாரர்


பல்லவி

அயோத்தி மன்னரான தசரதகுமாரர், தாஸரதியை, பணிவோர்க்கு

ஜெயமுண்டு பயமில்லையே, எதிலும் ஜெயமுண்டு பயமில்லையே அந்த


அனுபல்லவி

அழகன் அந்த ஆபத் பாந்தவனை ராம ராம என்றழைத்தால் போதுமே

நிழலாய் நம்முடன் வந்து துயர்களை துடைத்து அருள் புரியும் அந்த


சரணம்

அரக்கனின் அகந்தையை அழித்தே, அவதார நோக்கத்தை நிறைவேற்றி

அன்னை சீதையை மீட்டு வந்த அண்ணலை, அகிலமெல்லாம் போற்றிடும்

அஞ்சனை செல்வன், சுந்தரன் சதா ஜபித்திடும் ஶ்ரீராம நாமத்தை கூறியே

அருளும், ஐஸ்வர்யங்களையும், பெற்றே, குறைவற்று வாழ்ந்திட நாம் அந்த