அன்று தசரதகுமாரனாய் அயோத்தியில் அவதரித்தாரே
அன்று
தசரதகுமாரனாய் அயோத்தியில் அவதரித்தாரே
அன்னை கோசலை செல்வன் ஶ்ரீராமன்
நால்வருக்கு மூத்தவனாய் ஶ்ரீமந் நாராயணனே
மானுட ரூபத்தில் ஆணிவேராய் வந்தாரே
இன்று
அயோத்தி மாநகரில் நம் அனைவருக்குமே
தரிசனம் அளித்து குறைகள் அனைத்தையுமே
தீர்த்து நம்மனதை நல்வழியில் செல்வதற்கே
துணை இருந்து காப்பவரும் அவரே
அன்று
சீதையை மணம் புரிவதற்கே சிவதனுசை
வளைத்தொடித்தாரே அந்த கோதண்டராமன்
கோடிசூர்யப் பிரகாஸனாய் கோமளசியாமளனாய்
ஜானகியை கைபிடித்தாரே ராமர் கைபிடித்தாரே
இன்று
சரயூநதி கரையிலே அயோத்தியில் மிக அழகாகவே
அமைந்த பொற்கோவிலிலே நம்மை காத்திடவே
சீதாராமனாய் லஷ்மணன் ஆஞ்சனேயர் சமேதராக
சதா அருள் என்னும் அமுதத்தை அளிக்கிறாரே
அன்று
தந்தை தாய் சொல் கேட்டு தாரமாம் சீதையுடன்
துறவியாய் காட்ஷிதந்து தம்பியும் பின் தொடரவே
காடு சென்றாறே அவர் தயங்காமல் காடு சென்றாறே
ஶ்ரீராமன் தயங்காமல் கானகம் சென்றாறே
இன்று
அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டதை காணவே
எல்லோரும் வாருங்கள் ஆனந்தமாய் ராமனை காணவே
ராம பஜனை நாம் யாவரும் செய்து கொண்டே சென்று
அவர் அருளையும் ஆசியையும் பெற்றிடுவோமே
அன்று
பொன்மானை பிடிப்பதற்கு ஶ்ரீராமன் சென்ற போது
சீதையை தூக்கிச்சென்றானே ராவணன் தூக்கிசென்றானே
ஜானகியை அசோகவனம் தனில் கண்ட தாசன் அனுமனோ
மாதா விடம் கனையாழியை அளித்து சூடாமணியை பெற்றானே
இன்று
அகண்டநாம பஜனையும் கீர்த்தனைகளையும் பாடிக்கொண்டே
சீதாராமரை காணவே கூட்டம் கூட்டமாய் சென்லுவோமே நாம்
அனைவருமே கூட்டம் கூட்டமாய் சென்று தரிசிப்போமே
அவரின் ஆசியால் துன்பம் அகன்று பேரின்பம் பெருவோமே
அன்று
ராகவனிடம் சூடாமணியை கொடுத்தானே அனுமன் கொடுத்தானே
சேதுபந்தனம் செய்து யுத்தத்தில் யாவரையும் வென்று சென்றடைந்தானே
சீதையை சென்றடைந்தானே ஶ்ரீராமன் சீதையை சென்றடைந்தானே
அனுமன் துதித்தானே சீதாராமனை தாஸன் அனுமனும் துதித்துநின்றானே
இன்று
கோலாகலமாயும் கும்மாளமாயும் அயோத்தி காட்ஷி அளித்திடவே
யாவருமே அங்கே சென்று அனைவருடனும் கலந்து கொண்டோமே
ஜானகிராமரை காணச் சென்றோமே நாங்களும் தரிசிக்க சென்றோமே
ராம ராம ராம் ஶ்ரீராம ராம ராம் சீதாராம ராம ராம் ஜயராம ராம ராம்