அன்று அயோத்தி மாநகரான தர்மபூமியில்


அன்று

அயோத்தி மாநகரான தர்மபூமியில் நால்வருக்கு மூத்தவராய்

கோசலை செல்வன் தாசரதி ஶ்ரீராமன் அவதாரம் செய்தாரே


இன்று

எல்லோரும் வாருங்கள் அயோத்தி மாநகருக்கு செல்வோமே

பல்லாண்டுகளாய் நாம் தரிசிக்க விரும்பிய ஶ்ரீராமனை காணவே


அன்று

முனிவருக்கு உதவிட தம்பியுடன் சென்று யாகத்தை முடித்து கொடுத்தவரை

கல்லைமிதித்தே சாபத்தை தீர்த்து, வில்லைஒடித்து சீதையை மணந்தவரை காண


இன்று

சரயூ நதிகரையில் அற்புதமாய் அமைந்த பிரும்மாண்ட ஆலயம்தனிலே

கோபுர தரிசனமும் செய்து நம் குறைகளை தீர்ப்பவனை காண செல்வோமே


அன்று

தந்தைசொல்லே மந்திரம் எனக்கேட்டு சீதைமற்றும் லஷ்மணனுடனே

தயங்காமல் கானகம் சென்றாறே ராகவன், தயங்காமல் சென்றவரைக்காண


இன்று

வண்ண மயமான பல ராமர்களை தங்கள் கைவண்ணத்தில் வரைந்தே

நம்மை வியக்க வைக்கும் அந்த காட்ஷிகளை கண்டு தரிசிக்கவே


அன்று

குஹனின் உதவியால் கங்கை நதி கடந்து சித்திரகூடம் சென்றார்களே

பரதனுக்கு பாதுகையை அளித்தே ராஜ்யத்தை ஆள சொன்னவரை காண


இன்று

ராமரின் அந்த திவ்யமங்கள ரூபத்தை காண செல்வோமே அந்த

குணக் கடலான பாரிஜாத விருட்ஷத்தை கண்டு களித்திடுவோமே


அன்று

பொன்மானை பிடிப்பதற்கு ஶ்ரீராமன் செல்ல, ராவணன் தூக்கி சென்றானே

சீதையை, மைதலியை தேடியே தாஸன் மாருதியும் விறைந்து சென்றானே


இன்று

மரகதவண்ணனாய் புன்னகையுடன் காட்ஷி அளிக்கும் சீதாராமனை தரிசித்து

பரிபூரணமான ஆனந்தம் அடைந்து துன்பம் துடைக்க பெறுவோமே


அன்று

எங்குதேடியும் காணாத மாதாவை மாருதி, அந்தோ அஸோகவனம் தனிலே

சீதையை கண்டானே கனையாழியை அளித்து சூடாமணியை பெற்றானே


இன்று

தாஸன் அனுமன் கனையாழியை அளித்து சூடாமணியை பெற்று வந்தே

ஶ்ரீராமரிடம் அளித்த அற்புதமான காட்ஷியை கண்டு களிக்க செல்வோமே


அன்று

சேதுபந்தனம் செய்து யுத்தத்தில் அனைத்து அரக்கர்களையும் வென்று

சீதையை சென்றடைந்தாரே ஶ்ரீராமன் சீதையை சென்றடைந்தாரே


இன்று

சீதாராமராய் லஷ்மண பரத சத்ருக்ணருடன் தாசன் அனுமன் தாங்கிய

அரியணையில் அமர்ந்த பட்டாபிராமரை பேரானந்தமுடன் கண்டு

ராம ராம சீதாராம எனப்பாடி உள்ளும் புறமும் உண்டான நோய்கள் தீர்ந்து வீரகோதண்டராமரின் அழகிய திருவடித்தாமரையில் சரணடையவே

எல்லோரும் வாருங்கள்