என்ன ஓர் நாடகம் அப்பா இது ஶ்ரீராஜகோபாலனே


பல்லவி

என்ன ஓர் நாடகம் அப்பா இது ஶ்ரீராஜகோபாலனே

மன்னார்குடிதனில் நீ மாடுமேய்ப்பவன் போல் நிற்பது

அனுபல்லவி

அன்னங்கள் அசைந்தாடும் அந்த யமுனாநதி கரையில்

அன்னை யஸோதையினால் கட்டுண்ட கண்ணனே நீ

சரணம் (1)

கன்றுகளுடன் பசுவையுமே இங்கு அழைத்து வந்தே

நின்ற திருக்கோலத்தில் கையில் ஒரு கோலுடனே

புன்னகை முகத்தில் தவழ மாடுமேய்க்கும் கோலத்திலே

கண்களில் வாத்ஸல்யமுடனே நீ பக்தர்களை காப்பதுவுமே

சரணம் (2)

யமுனாநதியை தாண்டியே அன்னை யஸோதையிடம் வந்தாயே

ஹரித்திராநதியின் தெப்பத்தில் பக்தர்களுக்கு அருள் புரிகிறாயே

வெண்ணெயை திருடியே மாயா ஜாலங்கள் பலவும் செய்தாயே

வெண்ணைதாழியில் பக்தர்களிடம் வெண்ணையை பெறுகிறாயே

மண்ணைஉண்டே வாயில் உலகனைத்தையும் காட்டி சிரித்தாயே

மன்னைக்கு வந்தே எங்கள் உள்ளங்களையும் உனதாக்குகிறாயே