தேஜோமயமான தேவகிபாலன் தட்ஷிணதுவாரகை மன்னன்


தேஜோமயமான தேவகிபாலன் தட்ஷிணதுவாரகை மன்னன் ஶ்ரீராஜகோபாலன்


ஆசையுடன் தன்னை காணவந்தோரை, தாசனானான் என்று ஆனந்திப்பான்

பூக்களால் தன்னை பூஜை செய்வோரை புனிதனானான் என்று சந்தோஷிப்பான்

தேஜோமயமான தேவகிபாலன் தட்ஷிணதுவாரகை மன்னன் ஶ்ரீராஜகோபாலன்


பத்தரைமாற்று தங்கத்தில், வைரம்பதித்த கிரீடமும், வண்ணமயில்பீலி மின்னிடவே

முத்துமணிரத்தின தண்டைஅணிந்த பாதத்தைபக்தர்கள் மனதில்பதியவைப்பான்

தேஜோமயமான தேவகிபாலன் தட்ஷிணதுவாரகை மன்னன் ஶ்ரீராஜகோபாலன்


கொத்து சாவிகள் இடையில் குலுங்கிட, மத்தகஜம்போல் அவன் நின்றிருப்பான்

தன்னைஅண்டி வந்தோரை அஞ்சேல் எனக்கூறி அடைக்கலமுமே தந்திடுவான்

தேஜோமயமான தேவகிபாலன் தட்ஷிணதுவாரகை மன்னன் ஶ்ரீராஜகோபாலன்


கஸ்தூரி திலகமிட்டு, ஒத்தைவஸ்திரத்தில், மன்மதனாய் வீதி உலா வரும் அழகையும்

வெண்ணெய்தாழி வைபவத்தையும், கண்டுஆனந்திக்க கண்கள் கோடியும் போதாதே

தேஜோமயமான தேவகிபாலன் தட்ஷிணதுவாரகை மன்னன் ஶ்ரீராஜகோபாலன்


புன்முறுவல் பூத்த அந்த அழகிய முகத்தை, கண்டால் நம் முன்வினை தீர்ந்திடுமே

பிறவாபிணிதனை தீர்த்திடவே, பின் அழகு சேவையுமாய் நின்று காட்ஷி அளிக்கும்

தேஜோமயமான தேவகிபாலன் தட்ஷிணதுவாரகை மன்னன் ஶ்ரீராஜகோபாலன்


ஆசையுடன் தன்னை காணவந்தோரை தாசனானான் என்று ஆனந்திப்பான்

அவன் ஆனந்திப்பான், கோபாலன் ஆனந்திப்பான், ராஜகோபாலன் ஆனந்திப்பான்

ருக்மணி, சத்யபாமா சமேத ஶ்ரீ ராஜகோபாலன் ஆனந்திப்பானே