சந்தான கோபால பாலா + விருத்தம்
ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தியிடம் வளர்ந்தே
மாயங்கள் பலவும் செய்த மணிவண்ணா
மண்ணைதின்றே வையம் ஏழையும் குட்டி வாயில் காட்டி
அன்னையை வியக்க வைத்த கண்ணா
வெண்ணெயை திருடி திருடியே உண்டு
அன்னையிடம் கட்டுண்ட தாமோதரா
பல்லவி
சந்தான கோபால பாலா உன்தன் திருவடிகள் தனில்
சரண் அடைந்தோர்க்கு சகல பாக்கியங்களும் அருளும்
அனுபல்லவி
பரிபூரணமான உன்னை தரிசனம் செய்தே உன் அழகில்
மயங்கியே பார்த்து பரவஸம் மிக்க அடைந்தோம் கண்ணா
சரணம் (1)
மங்காத புகழ்களையும் மக்கட் செல்வங்களையும் அளித்து
எங்களின் குறைகள் அனைத்தையும் தீர்த்திடவே வந்து
ஆதிசேஷனின் மீது அனந்தசயனனாய் பள்ளிகொண்டே
தட்ஷிண துவாரகையில் கொஞ்சி விளையாடும் பாலா
சரணம் (2)
வண்ணமயில் பீலி முடியை அலங்கரிக்க
நீலப்பட்டாடையோ இடுப்பில் ஜொலித்திட
கள்ளச்சிரிப்புடனே கால்விரலை வாய்சுவைக்க
இதுதான் என்ன அழகு அற்புதம் அதிசயமோ என
பக்தர்கள் ஆனந்தமாய் கையில் ஏந்தி பார்த்தே
கோபாலனின் அழகில் மது உண்ட வண்டாய் நிற்க