அழகின் உருவமாய் அன்பின் சிகரமாய்
அழகின் உருவமாய் அன்பின் சிகரமாய் அறிவின் களஞ்சியமாய் திகழும் தேவிகளை
நவராத்திரி எனும் சுபராத்திரியில் பூஜித்து மகிழ்வோமே!
உலகினை காத்திடும் தேவிகள்!
நம் உறவினரையும் சேர்த்திடும் தேவிகள்!
உன்னதமான முப்பெரும் தேவிகளை!
அம்ப பாஹிமாம் - ஜகதம்ப ரக்ஷமாம்
லஷ்மி பாஹிமாம் - ஜயலஷ்மி ரக்ஷமாம்
வாணி பாஹிமாம் - கலைவாணி ரக்ஷமாம்
என்று ஆனந்தமாய் பாடியே ஆரத்தி எடுப்போமே நாம் ஆரத்தி எடுப்போமே!