அழகின் உருவமாய் அன்பின் சிகரமாய்


அழகின் உருவமாய் அன்பின் சிகரமாய் அறிவின் களஞ்சியமாய் திகழும் தேவிகளை

நவராத்திரி எனும் சுபராத்திரியில் பூஜித்து மகிழ்வோமே!


உலகினை காத்திடும் தேவிகள்!

நம் உறவினரையும் சேர்த்திடும் தேவிகள்!

உன்னதமான முப்பெரும் தேவிகளை!


அம்ப பாஹிமாம் - ஜகதம்ப ரக்‌ஷமாம்

லஷ்மி பாஹிமாம் - ஜயலஷ்மி ரக்‌ஷமாம்

வாணி பாஹிமாம் - கலைவாணி ரக்‌ஷமாம்


என்று ஆனந்தமாய் பாடியே ஆரத்தி எடுப்போமே நாம் ஆரத்தி எடுப்போமே!