மாலோல லஷ்மி நரஸிம்மனின் பாதமே துணை


பல்லவி

மாலோல லஷ்மி நரஸிம்மனின் பாதமே துணை

பாலனை காத்திடவே, பாய்ந்தோடி வந்த ஶ்ரீ


அனுபல்லவி

வேண்டிய வரங்களை தந்திடவே, பக்தர்கள்

வேண்டிய வரங்களை தந்திடவே, கலியுகத்தில்

அஹோபிலத்தில் அமர்ந்து தரிசனம் அளிக்கும் ஶ்ரீ

சரணம்

ஆணவம் மிகுந்த அரக்கனின் மமதை அடங்க

தூணிலிருந்து சிம்ம ரூபனாய் தோன்றியே

ஆயுதம் ஏதுமில்லாமல் அவனை மடியில் இருத்தி

கூறான நகத்தினாலே கொன்ற நரசிம்மன்

தான் அடித்த கையாலேயே பிடித்து அவனுக்கு

ஆனந்தமாகவே மோட்ஷமும் அளித்தவனின்

தாள்களை இருக பற்றி வணங்கி தீனதயாளா

காத்தருள்வாய் நீ என சரணடைந்திடுவோமே ஶ்ரீ