நாராயணா நாராயணா என்று அழைத்த பாலகனுக்கு


பல்லவி

நாராயணா நாராயணா என்று அழைத்த பாலகனுக்கு திருவருள் புரிய

தூணைபிளந்து கொண்டே ஓடி வந்தாரே பக்தவத்ஸலனான ஶ்ரீ ஹரி

அனுபல்லவி

தட தட வென ஒலி திக்கெட்டும் ஒலிக்கவே உக்ரஹமாகவே பக்தனுக்கருள

அதி பயங்கர உருவமான சிம்ம முகமும், மானுட உடலுமாகவே நரசிம்மராய்

சரணம்

அரக்கர்களும், தேவர்களுமே, நடு நடுங்கி நான்கு திசைகளிலும் பறந்தோடிடவே

அந்தோ இரண்யனை மடியில் கிடத்தி, நகத்தால் கிழித்தே மாலையாய் அணிந்த பின்

மன்னிப்பாய் கண்ணே, என் பெயர் சொன்னதால் எத்தனை கஷ்டங்கள் உனக்கு என

கண்களில் நீர் மல்க கூறி பிரகலாதனை அன்புடன் அணைத்து மடியில் இருத்தினாரே