கருணாமூர்த்தியே ஶ்ரீ நரஸிம்மா


பல்லவி

கருணாமூர்த்தியே ஶ்ரீ நரஸிம்மா உன்னை

சரண்டைந்தோர்க்கு ஏதும் குறை இல்லையே


அனுபல்லவி

நாராயணா என சதா பாராயணம் செய்த அசுர

பாலகனான பக்த பிரஹலாதனுக்கே அருள்புரிந்த


சரணம்

ஆணவமிக்க இரண்யனை வதைத்திடவே கல்

தூணையே பிளந்துவந்த மாலோலநரஸிம்மாஉன்

தாளடியே துணை என்று உன்னையே நம்பியோரை

காத்து அபயகரத்தால் எம்மை ஆசிர்வதிப்பாய் ஐயனே