அற்புதமாய் ஓர் அவதாரம் எடுத்தாரே
பல்லவி
அற்புதமாய் ஓர் அவதாரம் எடுத்தாரே அந்த
பார்க்கடல் வேந்தனான பக்தவத்ஸலன் அதி
அனுபல்லவி
நிற்கதியாய் நிற்கும் பாலகனை காத்திடவே
கற் தூணையே பிளந்து ஒரு கணத்தில் தோன்றி
சரணம்
தற்பெருமையையிலும் அற்ப சந்தோஷத்திலுமே
பேரானந்தமடைந்த இரண்யனை வதைத்திடவே
நாராயணனே நரசிங்கனாய் மாலோலனாய் பக்த
பிரஹலாதனை காத்து தன்மடியில் அமர்த்தியே அதி