நீலகண்ட தனயா வடிவேலனே


பல்லவி

நீலகண்ட தனயா வடிவேலனே

நித்தம் அருள் புரிவாய்நீ வள்ளிமனாளா


அனுபல்லவி


கோலத்திரு முருகா, கொவ்வை சிரிப்பழகா

குன்றில் ஆடும் குமரா, உன் இருபதம் பணிந்தேன்


சரணம்

பரமதயாசாகரா, பாலபிஷேக பிரியா, சரவணா

பவபயங்களை போக்கிடும் பன்னிருகையனே

வரமருள்வாய் நீ வண்ணமயில் வாகனனே

வண்டமர் சோலைதனில் வந்தாடுபவனே