சிவ குமாரனை சதா நினைமனமே
பல்லவி
சிவ குமாரனை சதா நினைமனமே சதா
சிவ குமாரனை சதா நினைந்திடு மனமே
அனுபல்லவி
பவபயங்களை போக்கிடும் அந்த பார்வதி செல்வனை
பாரெல்லாம் நிறைந்திருக்கும் ஆறுமுகவேலனை சதா
சரணம்
சிந்தையில் புகுந்த கந்தனாய், சேவற்கொடியோனாய்
தந்தைக்கு உபதேசம் செய்த ஸ்கந்தனாயும்
தரணியை காத்திட அறுபடை வீடுகள் தனிலே
தரிசனமளிக்கும்,ஐயனை வள்ளி, தேவானை மனாளனை சதா