காவடிசிந்து - மயிலேறி விறைந்தோடி வந்திடுவான்


  1. மயிலேறி விறைந்தோடி வந்திடுவான் (வண்ண)

மயிலேறி விறைந்தோடி வந்திடுவான்

கயிலை வாழ் சிவ சக்தி மைந்தன் கந்தன்

ஓடோடி வந்திடுவான் அவன் பறந்தோடி வந்திடுவான்


  1. வேல் போல கண்ணழகன் வில்லை போன்ற புருவமுடையவன்

பவழ செவ்வாயன் அவன் பட்டாடை உடுத்தியே பறந்தோடி வந்திடுவான்

நம் வினை தீர்த்து துணை நிற்பான் வள்ளி தேவானைக்கினியவன்

அழகனே குஹனே சிவகாமி மைந்தனான சிங்கார வேலனே


  1. சீலனே, பாலனே, குன்றத்தாடும் குமரனே திருக்குன்றத்தாடும் குமரனே

திருப்பரம் குன்றத்தாடும் குமரனே திருப்பரம் குன்றத்தாடும் குமரனே

சுவாமிமலை பிரணவனே உபதேசித்த இளையவனே

ஓம்கார ரூபனே சாமியே தகப்பன்சாமியே சாமிநாதனே


  1. திருத்தணி மலை ஐயனே குரவள்ளி நாயகனே

சரவணனே துணைவனே தணிகாசல மூர்த்தியே

பழமுதிர்ச்சோலை ஸ்கந்தனே முருகனே

வள்ளி தேவானை சமேதனே சுந்தரனே


  1. சுட்டபழம் வேண்டுமா சுடாதபழம் போதுமா பாட்டி என

ஔவைக்கு பழமளித்து பாடம் சொல்லி திகைக்க வைத்த கந்தனே

ஆண்டவனே ஆண்டவனே பழணி ஆண்டவனே

பழணிமலை ஆண்டியே குழந்தை தெய்வமே சிவ சக்தி பாலனே


  1. திருச்செந்தூர் வீரனே சூரனை அழித்த தீரனே

சூரபத்மனை அழித்த சூரசம்ஹாரனே

அறுபடை வீடுடைய அபிஷேக பிரியனே

ஆறுமுக பெருமாளே கார்த்திகேயனே

கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே

சச்சிதாநந்தனே சரவணபவனே உத்தம சீலனே மலை குருநாதனே


வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் சக்திவேல்

வேல் வேல் வஜ்ரவேல் வேல் வேல் வைரவேல் வேல் வேல் மாயவேல்

வேல் வேல் சூரனை ஒழித்த வேல் வேல் வேல் சூரசம்ஹாரனை பிளந்த வேல்