ஊஞ்சல் - ஓம் என்னும் பிரணவத்தினை ஊஞ்சலாக அமைத்து
ஓம் என்னும் பிரணவத்தினை ஊஞ்சலாக அமைத்து
சாம முதல் வேதங்களை சங்கிலியாய் கட்டி
உத்தமனும் உத்தமியும் ஆடினரே ஊஞ்சல்
கோடி மன்மத ரூபனாய் கோதண்டபாணியாக
அகலிகைக்கு சாப விமோசனமளித்த
ஶ்ரீராமருடன் ஜானகியும் ஆடினரே ஊஞ்சல்
அரவமுடிமேல் நின்று அபினயங்கள் பிடித்தவன்
ஒருபிடி அவலுக்காக உள்ளம் தனை கொடுத்த
அரங்கனுடன் நாயகியும் ஆடினரே ஊஞ்சல்
பவழ முத்து மாலைகள் சரம் சரமாய் தொங்க
பக்தியுடன் பார்த்தவர்கள் பரமானந்தம் அடைய
ருக்மிணியுடன் கண்ணன் ஆடினரே ஊஞ்சல்
லாலி லாலி லாலி லாலி