ஆடினரே ஊஞ்சல்
மங்களவாத்தியம்முழங்க மங்கையர்கள் கீதம்பாட
(அயோத்தி இளவரசன) கோசலை செல்வன் தாசரதியான
ஶ்ரீ ராமரும் ஜானகியும் ஆடினரே ஊஞ்சல்
மாமுனிவர்களும் வேதங்கள் ஓதிட
குவலயமே புகழ்ந்து மகிழ்ந்திட
கோதண்டராமனும் வைதேஹியும் ஆடினரே ஊஞ்சல்
தேவாதி தேவர்களும் யஷ கின்னர்ர்களும் பூமாரி பொழிய
சுந்தரராகவனும் பூமிஜாவுமே ஆடினரே ஊஞ்சல்
அகலிகைக்கு விமோசனமளித்து ஜனகநகரில்
சிவதனுசை வளைத்தொடித்த ஶ்ரீராகவசிம்மனும்
அன்பும் பண்பும் அமைதியும் நிறைந்த சீதாதேவியும்
ஆடினரே ஊஞ்சல் ஆடினரே ஊஞ்சல் லாலி லாலி