ஆரத்தி எடுத்திடுவோமே - ராஜகோபாலனுக்கு
ஆரத்தி எடுத்திடுவோமே ஶ்ரீ வித்யா ராஜகோபாலனுக்கு
ஆரத்தி எடுத்திடுவோமே
நாம் மங்கள ஆரத்தி சுற்றிடுவோமே ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும்
மங்கள ஆரத்தி சுற்றிடுவோமே
தேவகி வசுதேவரின் செல்வனாய் பிறந்து
யஸோதை நன்தகோபரிடம் ஆயனாய் வளர்ந்த
ஶ்ரீ வித்யா ராஜகோபாலனுக்கு
ஆரத்தி எடுத்திடுவோமே
நாம் மங்கள ஆரத்தி சுற்றிடுவோமே
மண்ணை உண்ட கண்ணனுக்கு வெண்ணெய் திருடி உண்ட கள்வனுக்கு
வேடிக்கையாய் அசுரர்களை கொன்ற மரகத வண்ணனுக்கு
தஞ்சம் அடைந்தோரை வஞ்சனை இன்றி காத்து அருள் புரியவே
தட்ஷிணதுவாரகை வந்த மன்னனான செங்கமலவல்லி சமேதனுக்கு
ஆரத்தி எடுத்திடுவோமே ஶ்ரீ வித்யா ராஜகோபாலனுக்கு
ஆரத்தி எடுத்திடுவோமே
நாம் மங்கள ஆரத்தி சுற்றிடுவோமே ருக்மணிக்கும் கிருஷ்ணருக்கும்
மங்கள ஆரத்தி சுற்றிடுவோமே