ஶ்ரீ மஹாலஷ்மியின் பொற்பாதங்களில்
பல்லவி
ஶ்ரீ மஹாலஷ்மியின் பொற்பாதங்களில் சரண்டைந்தோற்கு
குறை ஏதும் உளதோ, பற்பல நாமங்களுடன் நமை காத்திடும்
அனுபல்லவி
பார்க்கடலில் இருந்து, வேதங்களுடன் வந்த அலர்மேல்மங்கை
பாதம் நீட்டி பார் அளந்தானின் திரு மார்பினை அலங்கரிக்கும்
சரணம்
திருவரங்கமதில், ரங்கநாயகியாய், திருக்குடந்தையில் கோமளவல்லியாய்
தென்துவாரகையில், செங்கமலவல்லியாய், திருகாஞ்சியில் பெருந்தேவியாய்
புவியின் பாரங்களை தாங்கி, பூமாதேவியாய், ஒருதாய் சேயை காப்பது போல்
மாயையெனும் பிடியில் சிக்காமல், பக்தர்களை, உத்தமர்களாக்கிடும் தேவியான