விளையாட்டிற்கோர் எல்லை இல்லையா
பல்லவி
விளையாட்டிற்கோர் எல்லை இல்லையா இந்த சிறியவனிடம்
விளையாடுவதில் தான் எத்தனை இன்பங்களோ அம்மா உன்தன்
அனுபல்லவி
தீராத என் சங்கடங்களை தீர்த்து தினமும் உன் புகழ் பாடிட
தாராயோ வல்லமையும், மனதில் உறுதியையும் அம்மா
சரணம் (1)
சாகர மென்னும் சம்சாரத்தில் உன்னை மறந்ததை நினைத்து
பாராமுகமாய் இல்லாமல் எளியோனை மன்னித்தருள்வாய் அம்மா
சரணம் (2)
பிள்ளை பருவத்தில் உன்னை நினையாமல்
துள்ளி விளையாடும் போது நீ தொல்லை என
கேலிகள் பலவும் செய்து இறுமாப்புடனே பேசி
இல்லை தெய்வம் என்ற ஒன்று என ஏசியே
இளக்காரமாய் நகைத்ததை எண்ணி தள்ளாமலே
என்னை அன்புடனே கடைக்கண் பார்ப்பாய் அம்மா