காணக்கண்கள் கோடியும் போதாதே (லக்ஷ்மி)


பல்லவி

காணக்கண்கள் கோடியும் போதாதே, உன் கருணை முகத்தையும்

கனிவான பார்வையையும் கண்டு ஆனந்தம் அடைந்திடவே எமக்கு


அனுபல்லவி

கமலமலர் மேல் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் ஶ்ரீமஹாலக்ஷ்மி அந்த

கமலமும் நாணம் அடைந்திடுமே, உன்தன் காருண்ய முக அழகில்


சரணம்

அற்புதமானஉனது அலங்காரதையும், அருள்புரியும் அபயகரங்களையும்

ஆச்சர்யமான உனது பாத தரிசனமதிலும், மயங்கியே நாங்கள் எமது

இல்லங்களுக்கழைக்கிறோம், இல்லாமை இல்லாமல் செய்திடுவாயே

ஈடு இணை இல்லா பொன்மலர்கள் பொழியும் பார்கடல் செல்வி,உன்னை