அலைமாமகளே அன்பின்சிகரமே அழகியவடிவே ஶ்ரீலஷ்மி
பல்லவி
அலைமாமகளே அன்பின்சிகரமே அழகியவடிவே ஶ்ரீலஷ்மி
அருள் என்னும் அமுதத்தை சதா அளித்திடுவாயே ஶ்ரீதேவி
அனுபல்லவி
செங்கமலவல்லி மங்களரூபிணி செல்வத்தின்அதிபதி எங்கள்
சங்கடங்களை தீர்த்திடுவாய் சிங்கமுகத்தோனின் நாயகியே
சரணம்
சிற்றின்பத்திலேயே சதா உழன்று திரியும் இவ்வடிமைக்குமே
பேரின்பம் என்ற பொக்கிஷமே இதுதான் என அறியவைத்தாயே
வற்றாத ஊற்றாய் நீ இறுக்கையிலே குறை ஏதும் உளதோ
ஒப்பற்ற உனது பொற்பாதகமலங்களே சரணாகதி அம்மா