அலைமகளாம் ஶ்ரீ மஹாலக்ஷ்மியின் திருவடிகளை
பல்லவி
அலைமகளாம் ஶ்ரீ மஹாலக்ஷ்மியின் திருவடிகளை அன்புடன் பணிந்தால்
அக்ஷ்ட ஐஸ்வர்யங்களும் நம் இல்லத்தில் பொங்கி பெருகிடுமே
அனுபல்லவி
அனைத்துலகும் ஆண்டிடும் இவளின் கடைக்கண் பார்வையே
பனித்துளி போல் விலகிடுமே நமது துன்பங்கள் அனைத்தையுமே
சரணம்
பார்கடலில் அவதரித்த திருமகள் நம் பவபயங்களை போக்கியே
பரமானந்தம் அளித்திடும் சௌ பாக்யலக்ஷ்மியும் இவளல்லவோ
நாராயணனின் மார்பெனும் பீடமதில் உறைந்திருக்கும் ஶ்ரீக்ஷ்மி
வாராதிருப்பாளோ அவள் தாள் பற்றி நாம் அன்புடன் அழைத்தால்