வாசுதேவன் குழல் இசைத்து கொண்டிருக்க


வாசுதேவன் குழல் இசைத்து கொண்டிருக்க அங்கிருந்த

பசுக்களெல்லாம் புல் உண்பதை மறந்தே தலை ஆட்டிட


திசையெங்கும் இருந்து பறந்து வந்த பறவைகளோ அந்த

இசை கேட்டு மயங்கியே தன் இறக்கைகளை விறித்தாட


என்ன ஓர் மஹிமை கண்ணா உன்தன் செயல்கள் எல்லாமே

ஈரேழு புவனங்களும் வியந்து மகிழ்ந்து பாராட்டி புகழ்ந்திட


சின்ன வாயில் அனைத்து உலகையும் காட்டி சிரித்து சிரித்தே

அன்னையையே, யஸோதை அன்னையையே வியக்க வைத்தது


வாசுதேவா உன் குழலின் நாத ஒலியில் புல் உண்பதையே

பசுக்களெல்லாம் மறந்து தன் தலையை ஆட்டி நின்றிடவே


திசையெங்கும் இருந்து பறந்து வந்த பறவைகளோ அந்த

இசை கேட்டு மயங்கியே தன் இறக்கைகளை விறித்தாட