யாரேனும் கண்டீரோ என் அருமை கண்ணனை


யஸோதை

யாரேனும் கண்டீரோ என் அருமை கண்ணனை

குழல் ஊதி கானமிசைக்கும்வேணுகோபாலனை


ராதா

பொன்நிற உடை அணிந்து கண்ணன் அந்த வனத்தில்

பெண்களின் கூட்டத்தில் அவரும் ஆடச் சென்றுவிட்டாரோ


யஸோதை

எண்ணில் அடங்காத பல விஷமங்கள் செய்த கள்வன்

எப்படி சென்று மறைந்தானோ கண் இமைக்கும் நேரத்தில்


ராதா

இடைப் பெண்களின் கை கோர்த்து இன்பமுடன் ஆடியே

இன் சொல்லால் அவர்களையும் மயக்குகிறாறோ மயக்குகிராரோஅம்மா


யஸோதை

உன்னை பிரிந்து அவன் ஒருக் கணமும் இருந்தரியான்

உன்னை அல்லால் வேறு யாரரிவார் அவனை ராதே


ராதா

என்னையும் ஏய்த்து விட்டு மறைந்து விட்டார் அம்மா

இங்கும் அங்கும் அவரைத்தேடி அலைகிறேன் நான் அம்மா


கண்ணன்

எங்கும் நான் செல்லவில்லை எனதருமை ராதையே

உன்னை விட்டு நான் வேறெங்கு செல்வேன் கண்ணே


யஸோதை

என் அருமை பாலகனே எப்படி நீ இங்கு வந்தாய்

என்ன மாயமோ மாயமோஅப்பாயாரிடம் நான் இதை சொல்வேன்


கண்ணன்

அன்பும் பண்பும் நிறைந்த உன் பாலகனை உனக்கு தெரியாதா

அன்னை நீயே இதை ராதையிடம் எடுத்து சொல்வாய்


யஸோதை

எப்படி நான் எடுத்து சொல்வேன், நீ செய்யும் மாயமெல்லாம்

எனக்கே வியப்பாக இருக்கையிலேயே என் செல்வமே


கண்ணன்

கண்ணே ராதே உன்னை காண ஆனந்தமாய் ஓடிவந்தேன்

என் மேல் என்ன கோபம் நான் என்ன தவறு செய்தேன்


ராதா

எங்கெல்லாமோ தேடி களைத்து விட்டேன் நானும்

எங்கு சென்று மறைந்தீரோ என் அருமை கண்ணனே நீங்கள்


கண்ணன்

யாதவருடன் சென்று மாடு மேய்த்து வந்தேன் கண்ணே

மாதவன் உன்னை விட்டு வேறெங்கும் செல்ல மாட்டான்


ராதா

நீர் இன்றி நான் இங்கு தவித்திருக்கையிலே கண்ணா

யாருடன் சென்று வந்தீரோ என் ஆசை நாயகனே


கண்ணன்

பிருந்தாவனம் தனில் குழலூதி களைத்தே அங்கேயே

நித்திரையில் ஆழ்ந்து விட்டேன் என் அருமை நாயகியே


ராதா

என் உள்ளத்தை பறித்தது போல் நீங்கள் இன்னும்

எத்தனை பேரை மயக்கினீரோ யார்ரிவார் உம்மை சுவாமி


கண்ணன்

என்றென்றும் நான் உன்னை கை விட மாட்டேன் ராதே

என் மனதை உன்னை அல்லால் வேறு யார் அறிந்திடுவார்


ராதா

பொய்யே உமது தொழிலென்றுதெரிந்த பின்பும்

ஐயாஉம்மையே நினைத்தென் உள்ளம் ஏங்குதே


யஸோதை

எனக்கே புரியவில்லை ஈரேழு புவனம் காட்டி மர்மம்பல செய்தவனை

உனக்கும் அவனுக்கும் உள்ள பந்தத்தை நான் அறிவேன் ராதையே


கண்ணன்

அன்னையின் எண்ணப்படியே ஆடிப்பாடி களித்திருப்போம் ராதே

அந்த பிருந்தாவனம் தனில் நீயும் நானும் மட்டுமே கண்ணே