மாயவா மாதவா மதுசூதனா ஶ்ரீ கிருஷ்ணா
பல்லவி
மாயவா மாதவா மதுசூதனா ஶ்ரீ கிருஷ்ணா
மங்கைஉறை மார்பா நின் திருவடிகளே சரணம்
அனுபல்லவி
சேயான என்தன் மேல் சினம் கொள்ளாதேயப்பா
தாய்போல அரவணைப்பாயென நம்பி வந்தேனப்பா
சரணம்
தூணைப்பிளந்தே பக்தபிரஹலாதனை காத்தாயே
பாமரபெண்ணான சபரிக்கே மோட்ஷமளித்தாயே
தாஸன் ஆஞ்சனேயனின் நெஞ்சிலே உறைந்தாயே
ஓர் இரவிலே அன்னையை மாற்றிக்கொண்டாயே
கோவர்தனம் எடுத்தே ஆயர்களை காத்து நின்றாயே
சாரதியாய் வந்தே பார்த்தனுக்கு கீதைசொன்னாயே
கோதையான அந்த சுடர்கொடியையும் ஏற்றாயே
ஏன் இந்த தாமதம் ஐயா என்னிடம் கருணைகாட்ட