மனத்தில் இருத்தி ஆராதிப்போமே


பல்லவி

மனத்தில் இருத்தி ஆராதிப்போமே தினமும் நாம்

மாயங்கள் பல செய்யும் ஆயனை மாயனை சதா


அனுபல்லவி

வனத்தில் அமர்ந்து குழலூதி மயக்கிடும் (பிருந்தா)

வெண்ணெய் திருடி உண்டவனை ( கோபியர் இல்லத்தில் ) சதா


சரணம்

அன்னையால் கட்டுண்ட அந்த தாமோதரனை (யஸோதை)

புன்னை மரத்தின் மேல் ஒளித்து வைத்தே (கோபியரின் ஆடைகளை)

கண்களை சிமிட்டியே கை கொட்டி சிரித்த கள்வனை (தன் அழகிய)

மண்ணைதின்றே வாயில் மூவுலகையும் ஆளுவதை காட்டிய (தெரு)

மன்னனை அகிலலோக நாயகனான கோபாலனை (வடமதுரை)

கண்ணில் இமை காப்பது போலவே நம்மை காப்பவனை சதா