பூஜைகள் செய்தார்களோ தேவஹியும் வசுதேவருமே
பல்லவி
பூஜைகள் செய்தார்களோ தேவஹியும் வசுதேவருமே
பூபாலனாய் வந்து அவதரித்தார் கோபாலனே
அனுபல்லவி
பூணூல் அணிந்து சங்கு சக்ர தாரியாகவே
பூமியை காத்திடவே கார்மேக வண்ணனாக
சரணம்
பூரண சந்திரனை போலவே தேஜோமயமாயுமே
பூத்து குலிங்கிடும் பவழமல்லிபோல் புன்னகை புரிந்து
பூவராகவனான ஶ்ரீராமனே அங்கு நின்றிருந்தானே
பூரித்து ஆனந்தம் அடைந்தனறே தேவஹி வசுதேவருமே