நீலமுகில்வண்ணன் அந்த தேவஹிபாலனின்


நீலமுகில்வண்ணன் அந்த தேவஹிபாலனின்

பாதம் பணிந்தே பரமானந்தம் அடைவோமே


ஓம்காரமாய் கானமிசைத்துக்கொண்டே அவன்

ஓடிவரும் அழகினை காண அனைவரும் வாரீரோ


கானகம் சென்றே அவன் ஆனிரைகளை மேய்த்தான்

கோவர்த்தனமெடுத்து ஆயர்களை காத்த கோபாலன்


பாஞ்சாலி மானம்காக்க அருள்புரிந்த கானமூர்த்தி நீ

நமது பெரும்துயரை நொடியில் தீர்த்தே