தேவஹி செல்வனாய் பிறந்து யஸோதை பாலனாய் வளரும்
தேவஹி செல்வனாய் பிறந்து யஸோதை பாலனாய் வளரும்
மாய கண்ணனை காண அந்த மாயக் கண்ணனை காண
கோகுலம் சென்றிடுவோம் நாமும் கோகுலம் சென்றிடுவோமே
ஆயனாய் மாடு மேய்த்து வரும் கோபியர்கள் நேயனான
மாயக் கண்ணனை காண
கோகுலம் சென்றிடுவோம் நாமும் கோகுலம் சென்றிடுவோமே
இல்லம் தோறும் வெண்ணெய் திருடிய கள்ளனான கண்ணனை
மாயக் கண்ணனை காண
கோகுலம் சென்றிடுவோம் நாமும் கோகுலம் சென்றிடுவோமே
மண்ணை உண்ட வாயன் வாயில் அனைத்துலகும் காட்டி
தாயையே திகைக்க வைத்தவனை
மாயக் கண்ணனை காண
கோகுலம் சென்றிடுவோம் நாமும் கோகுலம் சென்றிடுவோமே
அனைவருமே ஆடிப் பாடி மகிழ்ந்து நாம் அனைவருமே ஆடிப் பாடி மகிழ்ந்து
இல்லத்திற்கே அழைத்திடுவோம் நம் இல்லத்திற்கே அழைத்திடுவோமே
மாயக் கண்ணனை அழைத்திடுவோமே நம் இல்லத்திற்கே அழைத்திடுவோமே
அழைத்திடுவோம் நம் இல்லத்திற்கு யஸோதை பாலனை மாயனை
இல்லத்திற்கே அழைத்திடுவோம் நம் இல்லத்திற்கே அழைத்திடுவோமே
மாவிலை தோரணங்கள் காற்றில் ஆட வாழை மரங்களும் நட்டு
அழைத்திடுவோம் நம் இல்லத்திற்கு
கண்ணனின் குட்டி பாதங்கள் மற்றும் வண்ண கோலங்கள் வரைந்து
அழைத்திடுவோம் நம் இல்லத்திற்கு
வகை வகையான பட்ஷணங்கள் பணியாரங்கள் பாயசங்களும் செய்து
அழைத்திடுவோம் நம் இல்லத்திற்கு
வித விதமான பழவகைகளும் வெண்ணெய் மற்றும் அவலையும் வைத்து
அழைத்திடுவோம் நம் இல்லத்திற்கு யஸோதை பாலனை மாயனை
இல்லத்திற்கே அழைத்திடுவோம் நம் இல்லத்திற்கே அழைத்திடுவோமே
கண்ணன் வருவான் மாய கண்ணன் வருவான் நம்மை குறைவின்றி காத்திடவே
கண்ணன் வருவான் குரும்பு கண்ணன் வருவான் மாயக் கண்ணன் வருவான்