சுட்டி பையன் குட்டி கண்ணன் கிட்ட வந்தாண்டி
சுட்டி பையன் குட்டி கண்ணன் கிட்ட வந்தாண்டி கை
கொட்டி சிரித்து கவலைகளை மறக்க செய்தாண்டி
கட்டி தயிரும் வெண்ணெய் பானையும் கண்ட அவன்
கண் சிமிட்டி என்னை மயக்கி விட்டு தட்டி விட்டாண்டி
மாடு கன்றை கட்டவிழ்த்து ஓட செய்தாண்டி அவன்
மறைந்திருந்து பார்த்து விட்டு சென்று விட்டாண்டி
தட்டில் நிறைய பூக்களை வைத்து கோர்க்க சென்றேண்டி
தட்டி விட்டு அதை கண்டு கொல்லென்று சிரித்தாண்டி
வீட்டை பூட்டி ஆற்றிற்கு நீர் எடுக்க சென்றேன்டி அந்த
பானையில் கல்லை யெறிந்து உடைத்து விட்டாண்டி
சிட்டு போல பறந்து வந்து காலில் விழுந்தாண்டி அந்த
க்ஷணத்திலே சங்கு சக்ரதாரியாய் எனக்கு காட்ஷி அளித்தாண்டி
அவன் காட்ஷி அளித்தாண்டி கண்ணன் காட்ஷி அளித்தான்டி