குவலயம் புகழும் கருநீல வண்ணன்


குவலயம் புகழும் கருநீல வண்ணன், கோலமயில் சிறகணிந்த பாலகன்

கொஞ்சும் சலங்கை தாளமிட, குட்டி வாயில் உலகை காட்டியவனே

கண்ணன் கண்ணன், அவன் நம் செல்லக் கண்ணனடி

குஞ்சுகைகளில் வெண்ணெய் வழிய, குசேலன், பலராமனுடனே

கோபர்களெல்லாம் பின் தொடர, கள்ளமாய் சிரித்து வருபவனே

கண்ணன், கண்ணன், அவன் நம் செல்லக் கண்ணனடி

குழலில் வேணுகானமிசைத்தே, கோபியர்களை மயக்கியவன்

கோவர்த்தனமலை தூக்கி, ஆயர்களை யெல்லாம் காத்தவனே

கண்ணன், கண்ணன், அவன் நம் செல்லக் கண்ணனடி

அவனே குருவாயூர் அப்பனடி,அவனே நம் குருவாயூர் அப்பனடி