குருவாயூர் செல்லுவோம் நாம் வாருங்கள்
பல்லவி
குருவாயூர் செல்லுவோம் நாம் வாருங்கள் அங்கு
குழந்தையாய் சிரிக்கும் கண்ணனை கண்டுகளிக்கவே
அனுபல்லவி
குறைவற்ற செல்வங்களை தன் கண்ணசைவாலே அளித்திடும்
குன்றை எடுத்தே ஆயர்களை காத்த பாலனின் அருளைபெறவே
சரணம்
கோரமான முகத்துடன் தன்னை கொல்ல வந்த அரக்கி
பூதனைக்கே மோட்ஷம் அளித்த மாயாஜாலனான பாலனின்
தாள் பணிந்தாலே மலைபோல் வந்த துன்பங்கள் யாவுமே
காலை கதிரவனை கண்ட பனிபோல அகன்றிடவே