கண்ணன் கண்ணன் அவன் குட்டிக்கண்ணன்


பல்லவி

கண்ணன் கண்ணன் அவன் குட்டிக்கண்ணன் மணி

வண்ணன் வண்ணன் அவன் கார்முகில் வண்ணன்


அனுபல்லவி

மண்ணைஉண்டே வாயில் உலகை காட்டிய மாயன்

வெண்ணெயை திருடி உண்ட கள்வனும் அவனே


சரணம் (1)

வண்ணமயில் பீலி காற்றினில் அசைந்தாடிட

தண்டை கொலுசுகளும், பட்டாடையும் உடுத்தியே

கன்னங்களில் குழிவிழ கள்ளமாய் சிரித்துகொண்டு

கண்ணை சிமிட்டியே அவன் வரும் அழகைக்கண்டு

பெண்களுமே அங்கு அசையாமல் நின்றுகொண்டே

கண்ணனின் அந்த அழகிலே மதி மயங்கினரோ மாய

கண்ணனின் அழகிலே மயங்கியே நின்றனரோ


சரணம் (2)

வண்ணக்குழலை எடுத்து அவன் கானமிசைப்பதை

கண்ட கோபியர்களுமே ஆடிப்பாடி மகிழ்ந்திடவே

வண்டினங்களும் சுற்றி ரீங்காரமிசைக்க அதை

விண்ணோரும் மண்ணோரும் பார்த்து ஆனந்திக்க

கண்ணனின் லீலைகள் தான் எத்தனை எத்தனை

எண்ணில் அடங்காத லீலைகள் செய்துமே அவன்

ஒன்றும் அறியாதவன் போல நடிக்கும் அந்த அற்புத