கண்ணா என் கண்மணியே வா வா


கண்ணா என் கண்மணியே வா வா - மன்னாதி

மன்னா எங்கள் இல்லம் தோறும் நீ வா வா


அன்னை யஸோதை பாலா நீ வா வா

வெண்பட்டு இடையில் உடுத்தி நீ வா வா


சுருள் முடியில் மயில் பீலி அணிந்து வா வா

காதில் குண்டலங்கள் அசைந்தாட வா வா


காலில் சலங்கைகள் நாதமிட நீ வா வா

மண்ணை தின்ற மாயவனே நீ வா வா


வெண்ணெய் உண்ட கள்வனே நீ வா வா

பொன் வண்ணக் குழல் ஊதி நீ வா வா


குன்றை குடையாய் எடுத்தவனே வா வா

குறை இன்றி எங்களை காக்க நீ வா வா