எங்கு சென்று தேடுவேன் யஸோதை பாலகனை


பல்லவி

எங்கு சென்று தேடுவேன் யஸோதை பாலகனை

எங்கும் நிறைந்திருக்கும் அந்த மாயா ஜாலனை


சரணம் (1)

ஆயர்குல செல்வனான நீலமேக சியாமளனை

ஆவினங்கள் மேய்க்கும் அந்த யாதவ குமாரனை

ஆய்ச்சியர் வீடுகளில் வெண்ணெய் திருடியவனை

ஆணவமிக்க அசுரர்களை கொன்றுகுவித்தவனை


சரணம் (2)

கோபியர்களுடன் கூடி கூடி விளையாடியவனை

கோவர்த்தனம் எடுத்து ஆயர்களை காத்தவனை

குழந்தையாய் குருபவனமதில் குடிகொண்டே நம்

குறைகளை தீர்க்க நம்முடன்அவனும் வந்துவிட்டானே