அழகு கண்ணன் ஆனந்தமாய் ஓடி வருவானே
அழகு கண்ணன் ஆனந்தமாய் ஓடி வருவானே நம்
அனைவரின் இல்லங்களையும் தேடி வருவானே
கோபியருடன் கோகுலத்தில் வளர்ந்த மாயவன்
கோலமயில் சிறகணிந்த நீல வண்ணனாம் அவன்
நீலவண்ணனாம் கண்ணன் நீலவண்ணனாம்
மாவிலை தோரணம் கட்டி, வண்ண வண்ணக் கோலமிட்டு
பாதங்களையும் பக்தியுடன் வரைந்திடுவோமே கண்ணனின்
பாதங்களையும் பக்தியுடன் நாம் வரைந்திடுவோமே
சீடை, முறுக்கு பாயசமென, பல இனிப்பு,காரம் செய்வோமே
பழவகைகளும், பால், தயிர், வெண்ணையும், வைப்போமே நாம்
வெண்ணையும் வைப்போமே, கண்ணனுக்கு வெண்ணையும் வைப்போமே
இல்லம் தோறும் எல்லாம் உண்ண துள்ளி வருவானே கண்ணன்
துள்ளி வருவானே, நம் கண்ணன் துள்ளி வருவானே, அவன் துள்ளி வருவானே
உலகம் உண்ட பெருவாயான் ஆடி வருவானே, அவன் ஓடி வருவானே
உலகை காக்கவே ஓடி வருவானே, நம் கண்ணன் ஓடிவருவானே
அழகு கண்ணன் ஆனந்தமாய் ஓடி வருவானே நம்
அனைவரின் இல்லங்களையும் தேடி வருவானே
நம் கண்ணன் ஆடி வருவானே, நம் கண்ணன் ஓடி வருவானே