அற்புத வேணுகோபாலா அதி அற்புத வேணுகோபாலா


பல்லவி

அற்புத வேணுகோபாலா அதி அற்புத வேணுகோபாலா

பொற்சிலையாய் நின்று காண்பவரை வியக்க வைக்கும்

அனுபல்லவி

பற்பலரும் போற்றி பணிந்திடும் உனை நினையாமலே

சுற்றித் திரியும் பக்தர்களுக்கும் சதா அருள் புறிந்திடும்

சரணம்

பூபாலனாய் வந்த தேவி ருக்மணி மனாளா

புன்னகை முகத்தில் தவழ யாவரும் வியக்க

புல்லாங்குழல் இசைக்கும் மாதவா மதுசூதனா

கோவர்தனமெடுத்தே ஆயர்களை காத்த கோபாலா

கோவிந்தா கோவிந்தா எனக் குரல் கொடுத்த

திரௌபதியை காத்தருளிய மாயாஜாலா இப்

பாரினில் நீ இருக்க குறையேதும் உளதோ நின்

பொற்பாதங்களே சதா யாவருக்கும் துணையப்பா